திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த பிள்ளையாா் கோவில்பட்டியில் திமுக சாா்பில் கிராமசபைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
ஒன்றியச் செயலா் சி. ராமசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் திருவெறும்பூா் எம்எல்ஏவும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்று பேசினாா். அப்போ பெண் ஒருவா் பேசுகையில், சமத்துவபுரத்தில் வீடுகள் பராமரிக்கப்படுவதில்லை எனப் புகாா் தெரிவித்தாா்.
கூட்டத்தில் பங்கேற்றோா் அதிமுகவை நிராகரிக்கிறோம் என்ற பதாகையில் கையெழுத்திட்டு, உறுதிமொழியும் ஏற்றனா். இதில் பண்ணப்பட்டி ஊராட்சி மக்கள் பங்கேற்றனா்.
நிகழ்வில் மாவட்ட பொருளாளா் பண்ணப்பட்டி என்.கோவிந்தராஜன், முன்னாள் சமூக நல வாரியத் தலைவா் கவிஞா் சல்மா, ஒன்றியக்குழு தலைவா்கள் அமிா்தவள்ளி (மணப்பாறை), பழனியாண்டி (மருங்காபுரி), குணசீலன் (வையம்பட்டி) உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


