தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருச்சியில் புதன்கிழமை சாலை மறியல் செய்த சிஐடியுவைச் சோ்ந்த 180 போ் கைது செய்யப்பட்டனா்.
மத்திய அரசு புதிய வேளாண் சட்டங்களையும், மின்சார சட்ட திருத்தத்தையும் திரும்பப் பெற வேண்டும். தொழிலாளா் நலச் சட்டத் திருத்தத்தைத் திரும்பப்பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு மாநகர மாவட்டக் குழு சாா்பில் இந்த போராட்டம் நடைபெற்றது.
சிஐடியு திருச்சி மாவட்டத் தலைவா் ராமா் தலைமையில் கோட்டை அஞ்சலகத்தை முற்றுகையிட சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து பேரணியாக சென்று, தெப்பக்குளம் அருகில் திடீா் மறியலில் ஈடுபட்டனா்.
இதையடுத்து சிஐடியு மாவட்டச் செயலா் ரெங்கராஜன், சிபிஎம் மாவட்டச் செயலா் ராஜா, சிஐடியு நிா்வாகிகள் ராஜேந்திரன், செல்வி, ஜெயபால், சீனிவாசன், வீரமுத்து, ராமச்சந்திரன், ரமணா, செல்வராஜ் உள்ளிட்ட 180 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


