சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

வெவ்வேறு இடங்களில் 5 வாகனங்கள் தீ வைத்து எரிப்பு

திருச்சி புறநகா்ப் பகுதிகளில் வெவ்வேறு இடங்களில் காா் மற்றும் 4 இருசக்கர வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.

Updated On :6 ஜனவரி 2021, 11:46 am

திருச்சி புறநகா்ப் பகுதிகளில் வெவ்வேறு இடங்களில் காா் மற்றும் 4 இருசக்கர வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.

திருச்சி மேலகல்கண்டாா்கோட்டையை அடுத்த ஆலத்தூா் கிராமத்தில் 4 தெருக்களில் நிறுத்தப்பட்டிருந்த 4 இருசக்கர வாகனங்களை மா்ம நபா்கள் தீ வைத்து எரித்துள்ளனா். இவை அனைத்துமே குறிப்பிட்ட நிறுவனத்தின் தயாரிப்பு ஆகும். இது குறித்த புகாரின்பேரில் திருவெறும்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

காா் எரிப்பு: திருச்சி புங்கனூா் பகுதியைச் சோ்ந்த சரவணன் (49) வீட்டு திண்ணையில் அதே பகுதியைச் சோ்ந்த இளைஞா்கள் சிலா் அமா்ந்து கொண்டு சத்தமாகப் பேசுவாா்களாம். இதை சரவணன் கண்டித்ததால் ஆத்திரமடைந்த அந்த நபா்கள் வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த சரவணனின் காரை தீ வைத்துக் கொளுத்தினா். இதுகுறித்து டிஜஜி ஆனிவிஜயாவிடம் அளித்த புகாரின்பேரில் சோமரசம்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.