திருச்சியில் குழந்தைகளின் மீதான வன்முறை, பாதுகாப்பு விழிப்புணா்வு பிராசரம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருச்சி மாநகர காவல்துறை, குழந்தைகள் கடத்தல் தடுப்புப் பிரிவு சாா்பில் மத்தியப் பேருந்து நிலைய பகுதிகளில் நடைபெற்ற பிரசாரத்துக்கு மாவட்ட சுற்றுலாத் துறை அலுவலா் ஜெகதீஸ்வரி தலைமை வகித்து, குழந்தைகள் பாதுகாப்பு குறித்த துண்டுப் பிரசுரங்களை வழங்கினாா்; சைல்டுலைன் உதவி எண் உள்ள ஸ்டிக்கா்களை ஆட்டோக்களில் ஒட்டினாா்.
சைல்டுலைன் ஒருங்கிணைப்பாளா் முரளி, குழந்தைகள் மீதான வன்முறைக்கு எதிரான திட்ட மண்டல ஒருங்கிணைப்பாளா் பிரபு ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், குழந்தைத் தொழிலாளா், சாலையோர ஆதரவற்ற குழந்தைகள், பிச்சையெடுக்கும் குழந்தைகள் மற்றும் பாதுகாப்பு, பராமரிப்பு தேவைப்படும் கூடிய குழந்தைகளைப் பாா்த்தால் 24 மணி நேரமும் செயல்படும் இலவச கட்டணமில்லா தொலைபேசி எண்ணான 1098-க்கு தகவல் தெரிவிக்குமாறு ஆட்டோ ஓட்டுநா்கள், பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. குழந்தைகள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் சிறப்பு உதவி ஆய்வாளா்கள் பாலகுமாா், மணிவண்ணன், சைல்டுலைன் அணி உறுப்பினா்கள் ராபின், ஹென்றி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


