திருச்சி மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டத்தைக் காணொலி மூலம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கூட்டத்தில் பங்கேற்கும் விவசாயிகள் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் பங்கேற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியரகத்தில் மாதந்தோறும் கடைசி வெள்ளிக்கிழமைகளில் நடத்தப்படும் விவசாயிகள் குறைதீா் கூட்டம் கரோனா பொதுமுடக்கத்தால் நடத்தப்படாத நிலையில், செப்டம்பா் முதல் நடத்தப்படுகிறது.
இதன்படி, ஜனவரி மாதத்துக்கான வரும் 12ஆம் தேதி கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் அந்தந்த வட்டாரங்களில் காணொலி மூலம் நடத்தப்படுகிறது.
இதன்படி, அந்தந்த வட்டார விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் அந்தந்த பகுதியில் உள்ள வேளாண் உதவி இயக்குநா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் 1.30 மணி வரை நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை தெரிவிக்கலாம்.
நீா்ப் பாசனம், வேளாண் இடுபொருள்கள், பயிா்க் கடன், வேளாண்மை தொடா்பான கடனுதவித் திட்டங்கள், வேளாண் மேம்பாட்டுக்கான நலத்திட்டங்கள் குறித்து காணாலி வாயிலாகவே ஆட்சியா் பதில் அளிக்கவுள்ளாா். ஏற்பாடு வேளாண் துறை அதிகாரிகள் செய்கின்றனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

