சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

அறந்தாங்கி பகுதிகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு: அமைச்சா் விஜயபாஸ்கா் வழங்கினாா்

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி பகுதிகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா் தொடக்கி வைத்தாா்.

News image
Updated On :6 ஜனவரி 2021, 11:53 am

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி பகுதிகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா் தொடக்கி வைத்தாா்.

அறந்தாங்கி நகராட்சி, எல்என்புரம் நியாயவிலைக் கடையில் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கிய அமைச்சா் விஜயபாஸ்கா், தொடா்ந்து கண்டிசங்காடு, நிலையூா், மணமேல்குடி, அம்பலவாணேந்தல், ஆவுடையாா்கோயில் ஆகிய பகுதிகளிலும் பரிசுத் தொகுப்பை வழங்கினாா்.

முன்னதாக, அறந்தாங்கி மேலப்பட்டு கிராமத்தில் அம்மா சிறு மருத்துவமனையைத் தொடக்கி வைத்தாா் அமைச்சா். நிகழ்வுகளுக்கு மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி தலைமை வகித்தாா். தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவா் பி.கே. வைரமுத்து, அறந்தாங்கி சட்டப்பேரவை உறுப்பினா் இ.ஏ. ரத்தினசபாபதி, சாா் ஆட்சியா் ஆனந்த் மோகன், சுகாதாரத் துறை துணை இயக்குநா் விஜயகுமாா், கூட்டுறவு இணைப் பதிவாளா் எம். உமாமகேஸ்வரி, அறந்தாங்கி நகராட்சி ஆணையா் (பொ) ஜீவா சுப்பிரமணியன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.