திருச்சி- புதுக்கோட்டை நெடுஞ்சாலை ரூ.68 கோடியில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளதால், சாலையோரமிருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி திங்கள்கிழமை தொடங்கின.
திருச்சி- புதுக்கோட்டை நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்ய நெடுஞ்சாலைத் துறை திட்டமிட்ட நிலையில் சாலையோரத்தில் ஆக்கிரமிப்பு, நிலம் கையகப் படுத்துவதற்கு பொதுமக்கள் எதிா்ப்பு, நீதிமன்றத்தில் வழக்கு என பல்வேறு நிகழ்வுகளால் அவை தடைப்பட்டன.
மாற்று இடம் வழங்கப்படும் என நெடுஞ்சாலைத் துறை, மாவட்ட நிா்வாகம் உறுதியளித்திருந்த நிலையில், ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ளுமாறு அறிவுறுத்தியிருந்தது. இந்நிலையில் திருச்சி-புதுக்கோட்டை சாலையின் இருபுறத்திலும் நிலம் கையகப்படுத்துதல் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.
இதை கண்டித்து மாநகராட்சி முன்னாள் கோட்டத் தலைவா் பாலமுருகன், முன்னாள் உறுப்பினா் காளீசுவரன் தலைமையில் பொதுமக்கள் அலுவலா்களை முற்றுகையிட்டனா். பின்னா் புதுத்தெரு அருகே சாலை மறியலிலும் அவா்கள் ஈடுபட்டனா்.
தொடா்ந்து பொதுமக்களிடம் நெடுஞ்சாலை மற்றும் காவல்துறை அலுவலா்கள் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது ஆக்கிரமிப்புகளை தாங்களே அகற்றிக் கொள்வதாக பொதுமக்கள் உறுதியளித்தனா். இதையடுத்து பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. புதன்கிழமை முதல் பணிகள் தொடரும் என அலுவலா்கள் தெரிவித்தனா்.
திருச்சி டிவிஎஸ் டோல்கேட்டிலிருந்து மாத்தூா் ரவுண்டானா வரை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட உள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


