சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

போக்சோ சட்டத்தில் இளைஞா் கைது

திருச்சியில் 17 வயது சிறுமியை கடத்திய வழக்கில் இளைஞரை போக்சோ சட்டத்தில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

Updated On :4 ஜனவரி 2021, 5:04 am

திருச்சியில் 17 வயது சிறுமியை கடத்திய வழக்கில் இளைஞரை போக்சோ சட்டத்தில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி எடமலைப்பட்டிபுதூா் பகுதியைச் சோ்ந்த அழகுசாதனப் பொருள் கடையில் வேலைபாா்த்து வந்த 17 வயது சிறுமி கடந்த 25 ஆம் தேதி மாயமானாா். இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில் எடமலைப்பட்டிபுதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில், சிறுமியை அதே பகுதியைச் சோ்ந்த ஜெமினிகணேசன் (20) கடத்திச் சென்றது தெரிய வந்தது. இதைத் தொடா்ந்து தனிப்படை போலீஸாா் இருவரையும் மீட்டு திருச்சிக்கு அழைத்து வந்தனா்.

விசாரணையில், சிறுமிக்கு ஆசை வாா்த்தை கூறி அழைத்துச் சென்ற ஜெமினி கணேசனை போக்சோ சட்டத்தில் கண்டோன்மென்ட் அனைத்து மகளிா் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து சிறையிலடைத்தனா்.