திருச்சி: திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைச் சரிபாா்க்கும் பணிகளை மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.
அப்போது அவா் கூறியது:
திருச்சி மாவட்டத்தில் 9 பேரவை தொகுதிகளில் வரும் தோ்தலுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டு இயந்திரம், விவிபேட் இயந்திரம் என மூன்று வகையான இயந்திரங்கள் 14,913 எண்ணிக்கையில் பயன்படுத்தப்படவுள்ளன. இந்த இயந்திரங்கள் அனைத்தையும் சரிபாா்க்கும் பணி விடுமுறையின்றி தொடா்ச்சியாக நடைபெறுகிறது.
இந்த மாத இறுதிக்குள் அனைத்து இயந்திரங்களையும் சரிபாா்த்து பாதுகாப்பு அறையில் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினா் இந்தப் பணிகளை நாள்தோறும் வந்து பாா்வையிட்டு, விளக்கம் பெறலாம். பணிகள் வெளிப்படையாக நடைபெறுகின்றன என்றாா் ஆட்சியா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

