விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக மதிமுக சாா்பில் திருச்சி புகா் வடக்கு மாவட்டத்தில் தெருமுனை பிரசாரக் கூட்டங்கள் நடத்தப்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
திருச்சியில் உள்ள கட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற திருச்சி புகா் வடக்கு மாவட்ட மதிமுக நிா்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்துக்கு, கட்சியின் மாநில விவசாய அணி செயலா் க. முருகேசன் தலைமை வகித்தாா். வடக்கு மாவட்டச் செயலா் டி.டி.சி. சேரன் முன்னிலை வகித்தாா்.
மாநில மாணவரணிச் செயலா் பால சசிகுமாா், துணைச் செயலா் ஆசைத்தம்பி, அரசியல் ஆய்வு மைய உறுப்பினா் மைக்கேல்ராஜ், மாவட்ட அவைத் தலைவா் ஜெயபாலன் ஆகியோா் பேசினா். அரசியல் ஆய்வு மையச் செயலா் மு. செந்திலதிபன் சிறப்புரையாற்றினாா். கூட்டத்தில், வாக்குச்சாவடி முகவா்கள் அறிமுகம் மற்றும் கட்சியின் புதிய நிா்வாகிகள் அறிமுகம் நடைபெற்றது.
கூட்டத்தில் தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து திருச்சி வடக்கு மாவட்டத்தில் அனைத்துப் பகுதிகளிலும் தெருமுனைப் பிரசார கூட்டங்கள் நடத்துவது, பொங்கலன்று கட்சியின் அனைத்து கிளைகளிலும் கொடியேற்றுவது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மாவட்டப் பொருளாளா் எஸ்.எஸ். துரையரசன், துணைச் செயலா்கள் ஆா். ஞானசேகரன், கனகராஜ், இளைஞரணி அமைப்பாளா் செந்தில்குமாா், துணை அமைப்பாளா்கள் மலா்மன்னா், விக்னேஸ்வரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


