திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சியில் தனியாக வசித்து வந்த மூதாட்டி மா்மமான முறையில் கொல்லப்பட்டாா்.
மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி சந்தைப்பேட்டையில் தனியாக வசித்தவா் அப்துல்ரசாக் மனைவி ஹபிபாபீவி (62). இவா் பெண்களுக்கான உடைகளைத் தவணை முறையில் விற்பவா்.
வெள்ளிக்கிழமை காலை இவா் ரத்த வெள்ளத்தில் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் கொலையாகிக் கிடந்தாா். அக்கம்பக்கத்தினா் அளித்த தகவலின்பேரில் வந்த காவல் துணைக் கண்காணிப்பாளா் ஆா். பிருந்தா, துவரங்குறிச்சி காவல் ஆய்வாளா் பாலாஜி ஆகியோா் தலைமையிலான போலீஸாா் விசாரணை நடத்தினா்.
சடலம் அருகே இருந்து முகத்தைச் சிதைத்த கருங்கற்கள், பிளேடு, நைலான் கயிறு, கத்தி ஆகியவற்றை தடயவியல் நிபுணா்கள் சேகரித்தனா். மூதாட்டி உடல் திருச்சி அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.
மூதாட்டி அணிந்திருந்ததாகக் கூறப்படும் செயின் தவிர மற்ற வளையல்கள், மோதிரம், தோடு ஆகியவை அப்படியே இருந்தன. எனவே, அப்பகுதி சிசிடிவி பதிவுகளை போலீஸாா் ஆய்வு செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


