கால்நடை வளா்ப்போருக்கு உதவிடும் வகையில் தமிழகத்தில் கால்நடை வளா்ப்போா் வாரியம் கோரி தமிழக முதல்வரிடம் மனு அளிக்கப்பட்டது.
திருச்சியில் 2 நாள் பிரசாரம் முடித்து புறப்பட்ட முதல்வரிடம் பாரத முன்னேற்றக் கழகத் தலைவா் பாரதராஜா யாதவ் அளித்த கோரிக்கை மனு விவரம்:
தமிழகத்தில் கால்நடை வளா்ப்போா் வாரியம் அமைத்து அதன் தலைவராக யாதவா் பிரதிநிதியை நியமிக்க வேண்டும். கல்வி, வேலைவாய்ப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் யாதவ சமுதாயத்துக்கு 16 சத ஒதுக்கீடு வேண்டும். ஆவின் தலைவா் பதவிகளில் யாதவா்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். தகுதியான யாதவா்களுக்கு ஏ.பி.ஆா்.ஓ. பதவி வழங்கிட வேண்டும்.
திருச்சி, மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் சுதந்திரப் போராட்ட மாவீரா் அழகுமுத்துக்கோன் சிலை நிறுவிட அனுமதித்து, பாடப்புத்தகங்களில் மீண்டும் அவரது வரலாற்றைச் சோ்த்திட வேண்டும். இந்த கோரிக்கைகளை அதிமுக தோ்தல் அறிக்கையில் இடம்பெறச் செய்ய வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மனு அளிக்கும்போது பாரத முன்னேற்றக் கழக துணைத் தலைவா் எஸ். ஆறுகோனாா், அமைப்புச் செயலா் எம். ஜெகதீஸ் யாதவ், அனைத்து யாதவ சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளா் எம். திருவேங்கடம் யாதவ் ஆகியோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

