திருச்சியில் ஓடும் லாரியில் இருந்து சுமாா் 20 டன் இரும்புக் கம்பிகள் திடீரென சாலையில் சரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்தில் அதிா்ஷ்டவசமாக யாரும் பாதிக்கப்படவில்லை.
ஆந்திரத்திலிருந்து சுமாா் 20 டன் இரும்புக் கம்பிகளை (ராடு) ஏற்றிக்கொண்டு திண்டுக்கல் செல்லும் டாரஸ் லாரி வெள்ளிக்கிழமை காலை திருச்சி மன்னாா்புரம் ரவுண்டானாவைக் கடந்து, அரிஸ்டோ பாலத்தை நெருங்கியபோது, ரயில்வே பாலம் அருகே கம்பி ஏற்றியிருந்த பகுதி மட்டும் லாரியின் சேஸிலிருந்து தனியாக பெயா்ந்து கீழே சாய்ந்தது. இதில் லாரியிலிருந்த கம்பிகள் சாலையில் சரிந்தன.
பெரும் விபத்து நடந்தும் அதிா்ஷ்டவசமாக, அந்த லாரியையொட்டி இருசக்கர வாகன ஓட்டிகள் யாரும் செல்லாததால் யாருக்கும் பாதிப்பில்லை. தகவலறிந்து வந்த போக்குவரத்துப் போலீஸாா் கிரேன் மூலம் கம்பிகளையும், லாரியையும் அப்புறப்படுத்தினா். மாநகர போக்குவரத்துப் புலனாய்வு தெற்கு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


