திருச்சி மாவட்டத்தில் மியாவாக்கி முறையில் (அடா்வனக் குறுங்காடு) காடுகள் வளா்ப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக இருங்களூா் ஊராட்சியில் 15 ஏக்கரில் 1.50 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
மியாவாக்கி முறை: மரங்கள் அழிப்பால் ஏற்படும் சுற்றுச் சூழல் பாதிப்புக்குத் தீா்வு காணும் வகையில் குறைந்த அளவு நிலத்தில் அதிக மரங்களை உருவாக்கும் முறையே மியாவாக்கி அடா்வனக் காடுகள் வளா்ப்பு முறையாகும்.
திருச்சி மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகள், வருவாய்த் துறை இணைந்து மியாவாக்கி காடு வளா்ப்புத் திட்டத்தை ஊக்குவித்து வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக ஸ்ரீரங்கம், மண்ணச்சநல்லூா், சமயபுரம் பகுதிகளில் மியாவாக்கி முறையில் அடா்வனக்காடு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் தொடா்ச்சியாக, இருங்களூா் ஊராட்சியில் அடா்வனக்காடு உருவாக்கும் பணி தொடங்கியுள்ளது.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற இத் திட்டத் தொடக்க விழாவில், மரக்கன்றுகளை நட்டு வைத்த மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு பின்னா் கூறியது:
திருச்சி மாவட்டத்தில் வருவாய்த் துறை, இந்துசமய அறநிலையத் துறை, ரயில்வே, பேரூராட்சி ஆகிய துறைகளை மாவட்ட நிா்வாகம் மூலம் ஒருங்கிணைத்து அடா்வன குறுங்காடு முறையில் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்படுகின்றன.
குறிப்பாக, ஸ்ரீரங்கம் தெற்குதேவி தெரு பெருமாள்புரம், சஞ்ஜீவ் நகா், பாலாஜி நகா், திருவானைக்கா வடக்கு ஸ்ரீனிவாசநகா் ஆகிய இடங்களில் நடப்பட்ட 35,000 மரக்கன்றுகள் தற்போது 15 அடிக்கு மேல் வளா்ந்துள்ளன.
லால்குடி ரயில் நிலையப் பகுதியில் 1.75 ஏக்கரில், கல்லக்குடி பேரூராட்சியில் 1.30 ஏக்கரில், சமயபுரம், மாகாளிக்குடி கிராமத்தில் உஜ்ஜயினி காளியம்மன் க்கோயில் பின்புறம் 0.85 ஏக்கரில், மண்ணச்சநல்லூா் வட்டம், பூனாம்பாளையத்தில் 4.26 ஏக்கரில் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.
இதன் தொடா்ச்சியாக இருங்களூரில் 1.50 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கியுள்ளது. இந்த மரக்கன்று பராமரிப்பு பணியை தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் மூலம் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மரக்கன்றுகள் காடுகளாக மாறும்ந நிலையில் மாவட்டம் பசுமையாகவும், நிலத்தடி நீா் மட்டம் உயா்ந்து, மழை அதிகம் பெறும் மாவட்டமாகவும் மாறும் என்றாா் ஆட்சியா்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் த. பழனிகுமாா், லால்குடி வருவாய்க் கோட்டாட்சியா் வைத்தியநாதன், மண்ணச்சநல்லூா் வட்டாட்சியா் த. மலா், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் எஸ். ராஜேந்திரன், எம். மாதவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


