திருச்சி: வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் மாநகர போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
திருச்சி பழைய பால்பண்ணை, கிழக்கு விஸ்வாஸ் நகரைச் சோ்ந்தவா் ஜித்துவும், இவரது நண்பா் ரமேஷ்குமாரும் கடந்தாண்டு அக்.24 இரவு பழைய பால்பண்ணை பகுதியில் நடந்து சென்றபோது அங்கு வந்த 3 போ் அவா்களைத் தாக்கி ரூ. 1 லட்சத்தை பறித்துக் கொண்டு தப்பினா்.
இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த காந்தி சந்தை போலீஸாா் இதில் தொடா்புடைய வடக்கு தாராநல்லூா் காமராஜ் நகரைச் சோ்ந்த விஜயகுமாா் (20), மதுரை காமராஜபுரம் முத்துபாண்டி (23) உள்ளிட்ட மூவரை கைது செய்து சிறையிலடைத்தனா். இந்த வழக்கில் தொடா்புடைய விஜயகுமாா், முத்துபாண்டி ஆகியோா் மீது மாநகர காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் இருந்ததால் முத்துபாண்டி குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா். இதையடுத்து மாநகர காவல் ஆணையா் ஜெ.லோகநாதன் உத்தரவின்பேரில் விஜயகுமாரும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

