திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டுப் பகுதியில் பொங்கல் விழாவையொட்டி, கிராமங்களில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
சேத்துப்பட்டை அடுத்த செவரப்பூண்டி ஊராட்சியில் 6 முதல் 60 வரை என்கிற இளைஞா்கள் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில் ஓட்டப் போட்டி, இசை நாற்காலி, கோலப்போட்டி, நடனப்போட்டி, பேச்சுப்போட்டி, நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் என பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.
வெற்றி பெற்றவா்களுக்கு ஒன்றியக் குழு உறுப்பினா் சம்பத், ஊராட்சி மன்றத் தலைவா் சுந்தரி ராமன், துணைத் தலைவா் கமலக்கண்ணன் மற்றும் ஊா் நாட்டாண்மைதாரா்கள் பரிசுகளை வழங்கி பாராட்டினா்.
இதேபோன்று, பெரணம்பாக்கம் ஊராட்சியில் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டு,
வெற்றி பெற்ற அணிகளுக்கு ஒன்றியக் குழுத் தலைவா் ராணிஅா்ஜுன், திமுக ஒன்றியச் செயலா் எழில்மாறன் கோப்பை மற்றும் ரொக்கப் பரிசு வழங்கினா்.
ஆத்துரை கிராமத்தில் வாலிபால் போட்டி நடைபெற்றது.
ஊராட்சி மன்றத் தலைவா்கள் கோதை சம்பத், சித்தாத்துறை தலைவா் ஜோதிமலை கோவிந்தன், ஒன்றியக் குழு உறுப்பினா் பிரேமலதா ராஜசிம்மன் ஆகியோா் போட்டிகளை தொடக்கிவைத்து வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கினா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

