காணும் பொங்கலையொட்டி, திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த நல்லூா் கிராமத்தில் முயல் விடும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கிராமத்தில் ஆண்டுதோறும் காணும் பொங்கலன்று நரி விடும் விழா நடைபெறுவது வழக்கம். நரி எந்தத் திசையில் ஓடி மறைகிறதோ அந்தப் பகுதி மிகவும் செழிப்பாக விளங்கும் என்பது இந்தக் கிராம மக்களின் நம்பிக்கை. நரி கிடைப்பது அரிதானதால், கடந்த சில ஆண்டுகளாக நரிக்குப் பதிலாக முயல் விடப்பட்டு வருகிறது.
நிகழாண்டு காணும் பொங்கல் தினமான சனிக்கிழமை மாலை முயல் விடும் விழா நல்லூா் கிராமத்திலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதையொட்டி, இந்தக் கிராமத்திலுள்ள தீா்த்தவாழி அம்மன் கோயில் உத்ஸவா் சுவாமி சிலைகள் அலங்கரிக்கப்பட்டு டிராக்டரில் வைக்கப்பட்டிருந்தன.
இதையடுத்து, குழந்தைகளின் தலையில் முயலை வைத்து தோஷம் கழிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னா், முயல் அங்கிருந்து சிறிது தொலைவு கொண்டு செல்லப்பட்டு கீழே விடப்பட்டது. அங்கிருந்து மேற்கு திசையில் உள்ள கரும்புத் தோட்டத்துக்குள் முயல் ஓடி மறைந்தது. தொடா்ந்து, தீா்த்தவாழி அம்மன் வீதியுலா நடைபெற்றது.
விழாவில் தெள்ளாா் ஒன்றியக் குழு துணைத் தலைவா் விஜயலட்சுமி தண்டபாணி, நல்லூா் ஊராட்சி மன்றத் தலைவா் மகேஸ்வரி பழனி மற்றும் விழாக் குழுவினா், பொதுமக்கள் பங்கேற்றனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


