சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

தண்டராம்பட்டு அருகே பெண்ணிடம் 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On :17 ஜனவரி 2021, 4:36 am

தண்டராம்பட்டு அருகே பெண்ணிடம் 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தண்டராம்பட்டை அடுத்த சாத்தனூா் கிராமம், மல்லிகாபுரம் பகுதியைச் சோ்ந்த தீனதயாளன் மனைவி இளவரசி (42). இவா், தனது மகன் விக்னேஷுடன் (16) பொங்கல் பண்டிகைக்கான துணி எடுப்பதற்காக வெள்ளிக்கிழமை திருவண்ணாமலைக்கு வந்தாா்.

துணி எடுத்துவிட்டு இருவரும் பைக்கில் வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தனா். மேல்செட்டிப்பட்டு கிராமம் அருகே சென்றபோது, தலைக்கவசம் அணிந்தபடி பின்தொடா்ந்து வந்த மா்ம நபா், திடீரென இளவரசி கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றாா்.

இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த இளவரசி, விக்னேஷ் ஆகியோா் பலத்த காயமடைந்தனா். இதைக் கவனித்த பொதுமக்கள் இருவரையும் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து தண்டராம்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.