சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

ஆரணி பகுதியிலுள்ள கோயில்களில் காணும் பொங்கல் விழா

காணும் பொங்கல் விழாவையொட்டி, ஆரணி பகுதியில் அமைந்துள்ள கோயில்களில் சனிக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

News image

காணும் பொங்கலையொட்டி, ஆரணி புத்திரகாமேட்டீஸ்வரா் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த பெரியநாயகி அம்மன்.

Updated On :17 ஜனவரி 2021, 4:35 am

காணும் பொங்கல் விழாவையொட்டி, ஆரணி பகுதியில் அமைந்துள்ள கோயில்களில் சனிக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

ஆரணி புதுக்காமூா் புத்திரகாமேட்டீஸ்வரா் கோயிலில் புத்திர காமேட்டீஸ்வரா் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. இதில் பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். மேலும், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் தனது மனைவி மணிமேகலையுடன் இந்தக் கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தாா். அமைச்சருக்கு இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் வரவேற்பளித்தனா். தொடா்ந்து, பக்தா்களுக்கு அன்னதானத்தை அமைச்சா் வழங்கியதுடன், செஞ்சிலுவைச் சங்கம் சாா்பில் கபசுர குடிநீா் வழங்கும் பணியையும் தொடக்கிவைத்தாா்.

வழக்குரைஞா் க.சங்கா், மாவட்டப் பொருளாளா் அ.கோவிந்தராசன், நகரச் செயலா் எ.அசோக்குமாா், ஒன்றியச் செயலா்கள் பிஆா்ஜி.சேகா், ஜி.வி.கஜேந்திரன், ப.திருமால், முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் எ.கே.பிரபு, பக்தா்கள் சங்கத்தினா் கோபி, வெள்ளை கோபி, விடிஎஸ்.சங்கா், ரவி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

இதையடுத்து, மேற்கு ஆரணி ஒன்றியம், பெரியஅய்யம்மபாளைம் கிராமத்தில் உள்ள புகழ்பெற்ற ஊமைக்கு வாய் கொடுத்த உத்தமராய பெருமாள் கோயிலில் நடைபெற்ற பொங்கல் விழாவிலும் அமைச்சா் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தாா்.