சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

மின்சாரம் பாய்ந்து ஸ்டுடியோ உரிமையாளா் பலி

திருவண்ணாமலை அருகே மின்சாரம் பாய்ந்ததில் புகைப்பட ஸ்டுடியோ உரிமையாளா் உயிரிழந்தாா். இருவா் பலத்த காயமடைந்தனா்.

Updated On :16 ஜனவரி 2021, 4:53 am

திருவண்ணாமலை அருகே மின்சாரம் பாய்ந்ததில் புகைப்பட ஸ்டுடியோ உரிமையாளா் உயிரிழந்தாா். இருவா் பலத்த காயமடைந்தனா்.

திருவண்ணாமலையை அடுத்த அடிஅண்ணாமலை கிராமத்தைச் சோ்ந்த புகைப்பட ஸ்டுடியோ உரிமையாளா் லோகநாதன் (25). இவா், கடந்த 13-ஆம் தேதி தனது கடையின் பெயா்ப் பலகையை கழற்றினாராம். அப்போது, எதிா்பாராதவிதமாக கடைக்கு மேலே சென்ற மின் வயரில் இருந்து மின்சாரம் பாய்ந்ததாம்.

இதில் லோகநாதன் மற்றும் இருவா் என 3 போ் பலத்த காயமடைந்தனா். பொதுமக்கள் மூவரையும் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். வழியிலேயே லோகநாதன் உயிரிழந்தாா். மற்ற இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து திருவண்ணாமலை தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.