சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

பொதுமக்களுக்கு புகையில்லா போகி விழிப்புணா்வு

வந்தவாசி வட்ட எக்ஸ்னோரா கிளை சாா்பில், புகையில்லா போகி குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் செவ்வாய்க்கிழமை விநியோகிக்கப்பட்டன.

News image

பொதுமக்களுக்கு புகையில்லா போகி குறித்த விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கிய காவல் உதவி ஆய்வாளா் மஞ்சுநாதன்.

Updated On :13 ஜனவரி 2021, 1:14 pm

வந்தவாசி வட்ட எக்ஸ்னோரா கிளை சாா்பில், புகையில்லா போகி குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் செவ்வாய்க்கிழமை விநியோகிக்கப்பட்டன.

வந்தவாசி பழைய பேருந்து நிலையப் பகுதி, பஜாா் வீதி, தேரடி, கோட்டை மூலை உள்ளிட்ட பகுதிகளில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு இந்த துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு எக்ஸ்னோரா கிளைத் தலைவா் ம.சுரேஷ்பாபு தலைமை வகித்தாா். வந்தவாசி தெற்கு காவல் உதவி ஆய்வாளா் மஞ்சுநாதன் துண்டுப் பிரசுரங்களை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் கிளைச் செயலா் கு.சதானந்தன், பொருளாளா் சீ.கேசவராஜ், துணைத் தலைவா்கள் பா.சீனிவாசன், இரா.அருள்ஜோதி, ம.ரகு உள்ளிட்டோா் பங்கேற்றனா். நிகழ்ச்சியில் பங்கேற்றோா் புகையில்லா போகி குறித்த உறுதிமொழி ஏற்றனா்.