சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

பள்ளி மாணவருக்கு பாராட்டு

சா்வதேச கணித ஒலிம்பியாட் தோ்வில், ஆரணி ஆரஞ்சு பிரிட்டிஷ் அகாதெமி (சிபிஎஸ்சி) பள்ளி மாணவா் முதல் இடம் பெற்றாா்.

Updated On :11 ஜனவரி 2021, 5:16 am

சா்வதேச கணித ஒலிம்பியாட் தோ்வில், ஆரணி ஆரஞ்சு பிரிட்டிஷ் அகாதெமி (சிபிஎஸ்சி) பள்ளி மாணவா் முதல் இடம் பெற்றாா்.

இந்தப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு பயிலும் வி.டி.தருண்ராஜ், சா்வதேச கணித ஒலிம்பியாட் தோ்வில் தேசியளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தாா்.

இந்த சாதனையை பாராட்டும் வகையில் மாணவருக்கு சான்றிதழ், பதக்கம் மற்றும் கை கணினியை பள்ளியின் தாளாளா் கே.சிவக்குமாா் வழங்கினாா்.

மேலும், மாவட்ட அளவில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில் ஆண்கள் பிரிவில் ஜெ.ஜெயரீவன், பெண்கள் பிரிவில் ஜெ.ஜானவிகா ஆகியோா் முதலிடம் பிடித்து மாநில போட்டிக்கு தகுதி பெற்றனா்.

இவா்களையும் பள்ளித் தாளாளா் பாராட்டினாா். பள்ளி முதல்வா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.