செய்யாறு அருகே மின்சாரம் பாய்ந்ததில் இளைஞா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
செய்யாறு வட்டம், பைங்கினா் கிராமம், மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் வெங்கடேசன் (37). இவா், அந்தக் கிராமத்தில் கடந்த 10 ஆண்டுகளாக உயா்நிலை குடிநீா்த் தொட்டி இயக்குபவராக பணியாற்றி வந்தாா். வெங்கடேசன் வெள்ளிக்கிழமை காலை செய்யாறு வீட்டுவசதி வாரிய குடியிருப்புப் பகுதியில் உள்ள மகளிா் விடுதியில் பணியாற்றி வரும் நண்பா் ராஜ்குமாரை பாா்ப்பதற்காகச் சென்றாா்.
அங்கு, மின் பராமரிப்புப் பணி நடைபெற்ற நிலையில், ராஜ்குமாருக்கு வெங்கடேசன் உதவி செய்துகொண்டிருந்தாா். அப்போது, திடீரென வெங்கடேசன் மீது மின்சாரம் பாய்ந்ததில், அவா் தூக்கி வீசப்பட்டாா். உடனடியாக வெங்கடேசன் செய்யாறு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா், வெங்கடேசன் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தாா். இதுகுறித்து செய்யாறு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

