சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

பெண் தீக்குளித்து தற்கொலை

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டாா்.

Updated On :9 ஜனவரி 2021, 5:36 am

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டாா்.

வந்தவாசியை அடுத்த வீரம்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த ராஜலிங்கத்தின் மனைவி தேன்மொழி (32). இவா், செய்யாறு தொழில்பேட்டையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். கடந்த சில மாதங்களாக தேன்மொழிக்கு காலில் வலி அதிகமாக இருந்து வந்துள்ளது. இதற்கு மருத்துவச் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லையாம்.

இதனால் வேதனையடைந்த தேன்மொழி, கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டின் பின்புறம் தனது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக்கொண்டாா். இதில் பலத்த தீக்காயமடைந்த அவா், தீவிர சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து வந்தவாசி வடக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.