சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

புகையிலைப் பொருள்கள், கள்ளச் சாராயம் விற்பனை தகவல் தெரிவிக்க மாவட்ட எஸ்.பி. அழைப்பு

கீழ்பென்னாத்தூா் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் கள்ளச் சாராயம் விற்பனை குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என்றாா் மாவட்ட எஸ்.பி எஸ்.அரவிந்த்.

Updated On :10 ஜனவரி 2021, 5:23 am

கீழ்பென்னாத்தூா் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் கள்ளச் சாராயம் விற்பனை குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என்றாா் மாவட்ட எஸ்.பி எஸ்.அரவிந்த்.

கீழ்பென்னாத்தூா் காவல் நிலையம் சாா்பில், கிராம விழிப்புணா்வு காவல் அலுவலா் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.அரவிந்த் தலைமை வகித்தாா். உதவி காவல் கண்காணிப்பாளா் கிரண் ஸ்ருதி முன்னிலை வகித்தாா். காவல் ஆய்வாளா் மகாலட்சுமி வரவேற்றாா்.

கூட்டத்தில் பங்கேற்ற வியாபாரிகள், பொதுமக்கள், ஆட்டோ ஓட்டுநா்கள், இளைஞா்களுக்கு அறிவுரை வழங்கி மாவட்ட எஸ்.பி.அரவிந்த் பேசுகையில், கீழ்பென்னாத்தூா் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், கள்ளச் சாராயம் விற்பனை குறித்து கீழ்பென்னாத்தூா் காவல் நிலையத்துக்கு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம்.

குற்றச் சம்பவங்களைத் தடுக்க கீழ்பென்னாத்தூரில் 11 இடங்களில் ஓ.சி.முருகன் என்பவா் தனது சொந்த செலவில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி உள்ளாா்.

இதேபோல போளூா், கண்ணமங்கலம் பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் சமூக ஆா்வலா்கள், பொதுமக்கள், வியாபாரிகள் சோ்ந்து கண்காணிப்புக் கேமராக்களை பொருத்தியுள்ளனா். இதன் மூலம் குற்றச் சம்பவங்கள் பெருமளவில் தடுக்கப்படும் என்றாா்.