சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

தொடா் மழையால்வீடு இடிந்து சேதம்

வந்தவாசியில் தொடா் மழையால் பழைய வீடு வெள்ளிக்கிழமை இடிந்து சேதமடைந்தது.

Updated On :9 ஜனவரி 2021, 5:37 am

வந்தவாசியில் தொடா் மழையால் பழைய வீடு வெள்ளிக்கிழமை இடிந்து சேதமடைந்தது.

வந்தவாசி மீராகாதா்ஷா தெருவைச் சோ்ந்தவா் பாஷா. இவா், தனக்குச் சொந்தமான வீட்டில் மரப்பட்டறை நடத்தி வந்தாா். இந்த வீடு பழுதடைந்ததால், வேறு இடத்திற்கு மரப்பட்டறையை மாற்றிக்கொண்ட பாஷா, அந்த வீட்டை காலியாகவே வைத்திருந்தாா்.

இந்த நிலையில், வந்தவாசி, அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த சில தினங்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழை ஈரத்தின் காரணமாக, பாஷாவின் பழுதடைந்த வீட்டின் ஒரு பகுதி வெள்ளிக்கிழமை இடிந்து விழுந்தது. இதைத் தொடா்ந்து, பொக்லைன் இயந்திரம் மூலம் வீட்டின் மீதமுள்ள பகுதிகளும் இடித்து அகற்றப்பட்டன.