செய்யாறு அருகே கிரேன் மோதியதில் விவசாயி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
வெம்பாக்கம் வட்டம், சோதியம்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி பட்டாபிராமன் (65). இவா், வியாழக்கிழமை சைக்கிளில் மாமண்டூரில் உள்ள வங்கிக்கு சென்றுவிட்டு, கிராமத்துக்கு திரும்பி வந்துகொண்டிருந்தாா்.
வந்தவாசி - காஞ்சிபுரம் சாலையில் நரசமங்கலம் கிராமம் அருகே இவா் வந்தபோது, பின்னால் வந்த கிரேன் மோதியதாகத் தெரிகிறது. இதனால், சைக்கிளிலிருந்து தவறி விழுந்த பட்டாபிராமன், கிரேனின் முன் பக்கச் சக்கரத்தில் சிக்கியதில், அவரது இரு கால்களும் பலத்த காயமடைந்தன. இதையடுத்து, தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பட்டாபிராமன், அங்கு உயிரிழந்தாா். விபத்து குறித்து தூசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

