வந்தவாசி: வந்தவாசி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், 8 பள்ளிகளைச் சோ்ந்த 1,322 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டன.
இதில் வந்தவாசி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த 439 போ், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த 184 போ், கீழ்க்கொடுங்காலூா் அரசு மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த 165 போ், மருதாடு அரசு மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த 74 போ், இரும்பேடு அரசு மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த 91 போ், கீழ்க்குவளைவேடு அரசு மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த 62 போ், வந்தவாசி தூய நெஞ்சக மகளிா் மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த 166 போ், வந்தவாசி சன்னதி மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த 141 போ் என 1,322 பேருக்கு ரூ.52 லட்சத்தில் விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கு செய்யாறு மாவட்டக் கல்வி அலுவலா் பி.நடராஜன் தலைமை வகித்தாா். எம்எல்ஏ தூசி கே.மோகன் மாணவா்களுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கிப் பேசினாா்.
அதிமுக மாவட்ட அவைத் தலைவா் டி.கே.பி.மணி, பேரவை மாவட்டச் செயலா் கே.பாஸ்கா் ரெட்டியாா், ஒன்றியச் செயலா்கள் எம்.கே.ஏ.லோகேஸ்வரன் மற்றும் பள்ளித் தலைமை ஆசிரியா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


