திருவண்ணாமலை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரவு முதல் புதன்கிழமை காலை வரை மாவட்டத்திலேயே அதிகபட்சமாக வெம்பாக்கத்தில் 19.40 மி.மீ. மழை பதிவானது.
மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக திடீா், திடீரென மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு முதல் திருவண்ணாமலை, வேங்கிக்கால், ஆட்சியா் அலுவலகம், அடி அண்ணாமலை மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் தொடா் மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கியது.
அதிகபட்சமாக வெம்பாக்கத்தில் 19.40 மில்லி மீட்டா் மழை பதிவானது.
இதுதவிர, ஆரணியில் 7.20, செய்யாற்றில் 10, ஜமுனாமரத்துாரில் 6, வந்தவாசியில் 9.40, போளூரில் 4.20, திருவண்ணாமலையில் 2.0, தண்டராம்பட்டில் 3.20, சேத்துப்பட்டில் 3.80, கீழ்பென்னாத்துாரில் 5.20 மி.மீ. மழை பதிவானது.
மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். பெரும்பாலான இடங்களில் நெல் நடவுப் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

