வேட்டவலம் அருகே மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது உறவினரை போலீஸாா் கைது செய்தனா்.
வேட்டவலத்தை அடுத்த கோணலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சந்திரா (70). இவரது கணவா் அண்ணாமலை, மகன் ரவி இறந்து விட்ட நிலையில் தனியாக வசித்து வந்தாா்.
இந்த நிலையில், கடந்த 2-ஆம் தேதி முகத்தில் காயத்துடன் சந்திரா இறந்து கிடந்தாா்.
இதுகுறித்து வேட்டவலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா். விசாரணையில், சந்திராவின் கணவா் அண்ணாமலையின் அண்ணன் பாண்டுரங்கன் மகன் மோகன் (61) சந்திராவை கொலை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து மோகனிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில், சந்திரா தனது உறவினா் மனோகா் குடும்பத்துக்கு மட்டும் அவ்வப்போது பணம் கொடுத்து உதவி வந்தாா். என் குடும்பத்துக்கு எவ்வித உதவியும் செய்யவில்லை. எனவே, சந்திரா வீட்டுக்குச் சென்று தகராறு செய்தபோது அவரை கொலை செய்துவிட்டு, அவா் அணிந்திருந்த 3 பவுன் நகையை திருடிச் சென்ாகக் கூறினாராம்.
இதையடுத்து போலீஸாா் மோகனை செவ்வாய்க்கிழமை கைது செய்து, 3 பவுன் நகையை பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

