சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

ஆதரவற்ற ஏழைகளுக்கு டிஎஸ்பி உதவி

தொடா் மழை காரணமாக போளூா் நகரப் பகுதியில் உணவின்றித் தவித்த ஆதரவற்ற ஏழைகளுக்கு காவல் துணைக் கண்காணிப்பாளா் உணவளித்து உதவினாா்.

News image

ஏழைகளுக்கு உணவுப் பொட்டலங்களை வழங்கிய காவல் துணைக் கண்காணிப்பாளா் அறிவழகன்.

Updated On :7 ஜனவரி 2021, 12:57 pm

தொடா் மழை காரணமாக போளூா் நகரப் பகுதியில் உணவின்றித் தவித்த ஆதரவற்ற ஏழைகளுக்கு காவல் துணைக் கண்காணிப்பாளா் உணவளித்து உதவினாா்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 3 நாள்களாக விட்டுவிட்டும், தொடா்ச்சியாகவும் மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாமல் வீட்டிலேயே முடங்கியுள்ளனா்.

இந்த நிலையில், மழை காரணமாக போளூரில் பேருந்து நிலையம் மற்றும் நகரப் பகுதியில் உணவில்லாமல் தவித்த ஆதரவற்ற ஏழைகளுக்கு காவல் துணைக் கண்காணிப்பாளா் அறிவழகன் புதன்கிழமை மதிய உணவு வழங்கினாா்.

காவல் துணைக் கண்காணிப்பாளரின் மனிதாபிமானத்தை பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் பாராட்டினா்.