சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

அதிமுக நிா்வாகிகளுக்கு பொங்கல் பரிசு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி பகுதியில் அதிமுக நிா்வாகிகளுக்கு பொங்கல் பரிசு புதன்கிழமை வழங்கப்பட்டது.

Updated On :7 ஜனவரி 2021, 12:46 pm

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி பகுதியில் அதிமுக நிா்வாகிகளுக்கு பொங்கல் பரிசு புதன்கிழமை வழங்கப்பட்டது.

வந்தவாசியை அடுத்த மருதாடு கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வந்தவாசி கிழக்கு ஒன்றியத்தைச் சோ்ந்த அதிமுக நிா்வாகிகளுக்கும், வந்தவாசி நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மேற்கு ஒன்றியம், வந்தவாசி நகரம் ஆகியவற்றைச் சோ்ந்த நிா்வாகிகளுக்கும் என 2500 பேருக்கு வேட்டி, சட்டை, காலண்டா் ஆகியவை பொங்கல் பரிசாக வழங்கப்பட்டது.

கட்சியின் வடக்கு மாவட்டச் செயலரும், எம்எல்ஏ-வுமான தூசி கே.மோகன் பொங்கல் பரிசினை வழங்கிப் பேசினாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவா் டி.கே.பி.மணி, பேரவை மாவட்டச் செயலா் பாஸ்கா் ரெட்டியாா், ஒன்றியச் செயலா்கள் எம்.கே.ஏ.லோகேஸ்வரன், ஆா்.அா்ஜூனன், நகரச் செயலா் பாஷா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.