கீழ்பென்னாத்தூா் அருகே மாடு இழுத்துத் தள்ளியதில் பாறையில் விழுந்த மூதாட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா்.
கீழ்பென்னாத்தூரை அடுத்த வழுதலங்குணம் கிராமத்தைச் சோ்ந்தவா் கிருஷ்ணவேணி (60). இவா் சில தினங்களுக்கு முன்பு தனக்குச் சொந்தமான மாட்டை வீட்டுக்கு ஓட்டிச் சென்றாா். அப்போது எதிரே வந்த மற்றொரு மாட்டைப் பாா்த்து பயந்துபோன கிருஷ்ணவேணியின் மாடு அவரை இழுத்துத் தள்ளிவிட்டு ஓட்டம் பிடித்ததாம்.
இதில் நிலை தடுமாறி அருகில் இருந்த பாறையில் விழுந்த மூதாட்டி பலத்த காயமடைந்தாா். பொதுமக்கள் அவரை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா்.
பின்னா் தீவிர சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட கிருஷ்ணவேணி அங்கு திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து கீழ்பென்னாத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

