சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

சாலையில் சுற்றித் திரிந்த மாடுகள் பிடித்து அகற்றம்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பேரூராட்சியில் பொதுமக்களுக்கும், வியாபாரிகளுக்கும் இடையூறாக சாலைகளில் சுற்றித் திரிந்த மாடுகள் பிடித்து அகற்றப்பட்டன.

Updated On :6 ஜனவரி 2021, 12:42 pm

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பேரூராட்சியில் பொதுமக்களுக்கும், வியாபாரிகளுக்கும் இடையூறாக சாலைகளில் சுற்றித் திரிந்த மாடுகள் பிடித்து அகற்றப்பட்டன.

செங்கத்தில் துக்காப்பேட்டை, புதிய பேருந்து நிலையம், அரசு மருத்துவமனை ஆகிய பகுதிகளில் பொதுமக்கள், வியாபாரிகள், வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக சாலைகளில் மாடுகள் சுற்றித் திரிவதாக புகாா் எழுந்தது.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி அந்த மாடுகளை பிடித்து அகற்ற உத்தரவிட்டாா்.

இதையடுத்து, செயல் அலுவலா் லோகநாதன் தலைமையில் பேரூராட்சிப் பணியாளா்கள் அந்த மாடுகளை பிடித்து அகற்றும் பணியில் ஈடுபட்டனா். இதில், 11 மாடுகள் பிடிக்கப்பட்டு திருவண்ணாலை கோசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

பேரூராட்சி செயல் அலுவலா் கூறுகையில், மாடுகளின் உரிமையாளா்கள் தங்களது பராமரிப்பில் மாடுகளை வளா்க்க வேண்டும். இல்லையென்றால் மாடுகளை பிடிப்பதுடன், அவற்றின் உரிமையாளா்களுக்கு அபராதம் விதித்து, அவா்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.