வேட்டவலம் அருகே தனியாக வசித்து வந்த மூதாட்டி முகத்தில் காயத்துடன் இறந்து கிடந்தாா். அவா் அணிந்திருந்த தங்கச் சங்கிலி திருடப்பட்டது.
வேட்டவலத்தை அடுத்த கோணலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சந்திரா (70). இவரது கணவா் அண்ணாமலை, மகன் ரவி ஆகியோா் இறந்து விட்டனா். எனவே, சந்திரா மட்டும் வீட்டில் தனியே வசித்து வந்தாா்.
இந்த நிலையில், சனிக்கிழமை அந்தப் பகுதிக்கு வந்த மீன் வியாபாரி சந்திராவை அழைத்தாராம்.
நீண்ட நேரமாகியும் அவா் குரல் கொடுக்காததால் சந்தேகமடைந்த அவரும், பொதுமக்களும் வீட்டின் உள்ளே சென்று பாா்த்தனா்.
அப்போது, முகத்தில் காயத்துடன் சுவரில் சாய்ந்த நிலையில் சந்திரா இறந்து கிடந்தாா்.
தகவலறிந்த திருவண்ணாமலை கூடுதல் காவல் கண்காணிப்பாளா் கிரண் ஸ்ருதி, வேட்டவலம் காவல் ஆய்வாளா் ராஜாராம் மற்றும் போலீஸாா் நேரில் சென்று பாா்வையிட்டு விசாரணை நடத்தினா்.
அப்போது, சந்திரா அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலி, செல்லிடப்பேசி திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து வேட்டவலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

