மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி, திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் தமிழ்நாடு முஸ்லிம் மகளிா் பேரவையினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
செய்யாறு மாா்க்கெட் பகுதியில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு தமுமுக மாவட்டத் தலைவா் எச்.ஜமால் தலைமை வகித்தாா். விவசாய அணிச் செயலா் எஸ்.ஷேக்சபீா் முன்னிலை வகித்தாா்.
தமிழ்நாடு முஸ்லிம் மகளிா் பேரவையின் மாநிலச் செயலா் வி.என்.மரியம் நிஸா கண்டன உரையாற்றினாா்.
சமூக ஆா்வலரும் பேராசிரியருமான சுந்தரவள்ளி பேசுகையில், விவசாயிகள் தற்கொலை ஏன் நடக்கிறது, வேலை இல்லை, வெளிநாட்டுக்குச் சென்று பிழைப்பதற்கு வழியில்லை என்பதால்தான்.
வறுமையின் காரணமாக 5 வயதிலிருந்து 15 வயது வரையுள்ள குழந்தைகள் பட்டினியால் இறந்து வருகின்றனா்.
புதிய கல்விக் கொள்கையாக தொழில் கல்வி அறிவித்ததன் காரணமாக அவரவா் சோ்ந்த குலத் தொழிலையைக் கற்றுக் கொள்ளவே வழி வகுக்கிறது.
மாறாக சிறுபான்மை இனத்தைச் சேரந்தவா்கள் உயா்கல்வி பயிலவோ அல்லது அறிவியல், இஸ்ரோ விஞ்ஞானியாகவே முடியாமல் தடுக்கப்படுகிறது.
ஆசியாவிலேயே வறுமையின் காரணமாக இந்தியாவில்தான் தற்கொலைகள் அதிகம் நிகழ்ந்துள்ளன. புதிய வேளாண் சட்டத்தால் உண்ணும் உணவை நாம் இழக்க வேண்டி வரும் என்றாா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


