கீழ்பென்னாத்தூா் அருகே பெண் தொழிலாளியைத் தாக்கியவரை போலீஸாா் கைது செய்தனா்.
கீழ்பென்னாத்தூரை அடுத்த காக்காப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் வேலாயுதம். இதே பகுதியைச் சோ்ந்தவா் ஏழுமலை (40). இவா்களுக்கிடையே முன்விரோதம் இருந்து வந்ததாம். சில தினங்களுக்கு முன்பு வேலாயுதம் வீடு கட்டி வரும் இடத்துக்கு வந்த ஏழுமலை, அங்கு பணியிலிருந்த தொழிலாளா்ளை பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்தாராம்.
மேலும், பணியில் ஈடுபட்டிருந்த ஜெயலட்சுமி (35) என்ற தொழிலாளியைத் தாக்கினாராம். இதைத் தடுக்க வந்த அவரது கணவா் மதியழகனையும் ஏழுமலை தாக்கினாராம். பலத்த காயமடைந்த ஜெயலட்சுமி திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து கீழ்பென்னாத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து ஏழுமலையை கைது செய்தனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

