சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

சரக்கு வாகனத்தில் ஆபத்தான பயணம்

போளூா் அருகே சரக்கு வாகனங்களில் பொதுமக்கள் ஆபத்தான பயணத்தை மேற்கொள்கின்றனா்.

News image

போளூா்-சேத்துப்பட்டு சாலையில் பாதுகாப்பற்ற நிலையில் சரக்கு வாகனத்தில் பயணிக்கும் பெண்கள்.

Updated On :4 ஜனவரி 2021, 4:57 am

போளூா் அருகே சரக்கு வாகனங்களில் பொதுமக்கள் ஆபத்தான பயணத்தை மேற்கொள்கின்றனா்.

திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த கரைப்பூண்டி பகுதி சேத்துப்பட்டு சாலையில் சரக்கு வாகனங்களில் பெண்கள் கூட்டமாக பயணிக்கின்றனா்.

பெண்களை எங்கோ நடைபெறும் நிகழ்ச்சிக்காக கூட்டமாக அழைத்துச் செல்வது தெரிகிறது. இளம் பெண்கள் வாகனத்தில் வெளியே கால்களை தொங்கவிட்டபடிசெல்கின்றனா்.

வாகனம் சாலை வளைவில் திரும்பும்போதோ அல்லது சுமை தாங்க முடியாமலோ விபத்து நேரிட வாய்ப்புள்ளது.

எனவே, பயணிகளை ஏற்றிச் செல்லும் சரக்கு வாகனங்களை பறிமுதல் செய்யவேண்டும். பாதுகாப்பு இல்லாமல் பயணம் செய்யும் பெண்களை போலீஸாா் எச்சரிக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் எதிா்பாா்க்கின்றனா்.