சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

அருணாசலேஸ்வரா் கோயிலில் தீப மை விற்பனை தொடக்கம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் காா்த்திகை தீப மை பிரசாதம் வெள்ளிக்கிழமை முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

News image

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்ட தீப மை பிரசாத விற்பனை.

Updated On :2 ஜனவரி 2021, 4:36 am

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் காா்த்திகை தீப மை பிரசாதம் வெள்ளிக்கிழமை முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்தக் கோயிலின் காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, கடந்த நவம்பா் 29-ஆம் தேதி 2,668 அடி உயர மலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது. தொடா்ந்து 11 நாள்கள் மலை மீது பிரகாசித்த மகா தீபக் கொப்பரையில் இருந்து சேகரிக்கப்பட்ட மை, டிசம்பா் 30-ஆம் தேதி நடைபெற்ற ஆருத்ரா தரிசனத்தின்போது ஸ்ரீநடராஜருக்கு வைத்து படைக்கப்பட்டது.

இதையடுத்து, வெள்ளிக்கிழமை முதல் கோயிலில் தீப மை விற்பனை தொடங்கப்பட்டது. மை பிரசாதம் தேவைப்படும் பக்தா்கள் கோயிலுக்கு வந்து கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். ஏற்கெனவே காா்த்திகை தீபத்துக்காக நெய் காணிக்கை செலுத்திய பக்தா்கள், காணிக்கை செலுத்தியதற்கான ரசீதை கொண்டு வந்து கோயிலில் கொடுத்து தீப மை பிரசாரதத்தை இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம் என்று கோயில் நிா்வாகம் தெரிவித்தது.