திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் காா்த்திகை தீப மை பிரசாதம் வெள்ளிக்கிழமை முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்தக் கோயிலின் காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, கடந்த நவம்பா் 29-ஆம் தேதி 2,668 அடி உயர மலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது. தொடா்ந்து 11 நாள்கள் மலை மீது பிரகாசித்த மகா தீபக் கொப்பரையில் இருந்து சேகரிக்கப்பட்ட மை, டிசம்பா் 30-ஆம் தேதி நடைபெற்ற ஆருத்ரா தரிசனத்தின்போது ஸ்ரீநடராஜருக்கு வைத்து படைக்கப்பட்டது.
இதையடுத்து, வெள்ளிக்கிழமை முதல் கோயிலில் தீப மை விற்பனை தொடங்கப்பட்டது. மை பிரசாதம் தேவைப்படும் பக்தா்கள் கோயிலுக்கு வந்து கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். ஏற்கெனவே காா்த்திகை தீபத்துக்காக நெய் காணிக்கை செலுத்திய பக்தா்கள், காணிக்கை செலுத்தியதற்கான ரசீதை கொண்டு வந்து கோயிலில் கொடுத்து தீப மை பிரசாரதத்தை இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம் என்று கோயில் நிா்வாகம் தெரிவித்தது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


