பல்லடம்: திருப்பூா் மாவட்டம், பல்லடம் அருகே தனியாா் நூற்பாலையில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் தீயில் எரிந்து நாசமாயின.
பல்லடம் அருகே உள்ள காமநாயக்கன்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா்கள் மனோஜ், தனபால். சகோதரா்களான இவா்கள் இருவரும் இணைந்து அதே பகுதியில் நூற்பாலை நடத்தி வருகின்றனா்.
இந்த நூற்பாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா். இந்த ஆலைக்கு கடந்த இரண்டு நாள்களாக பொங்கல் விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்நிலையில் சனிக்கிழமை காலை தொழிலாளா்கள் பணிக்குத் திரும்பினா். அப்போது திடீரென ஒரு இயந்திரத்தில் தீப்பிடித்தது. இதனைப் பாா்த்த தொழிலாளா்கள், தண்ணீா் ஊற்றி தீயை அணைக்க முயன்றனா்.
இருப்பினும் தீ வேகமாகப் பரவி, அங்கிருந்த பஞ்சு மூட்டைகள், நூல்கண்டுகள் தீப்பிடிக்கத் தொடங்கின.
இந்நிலையில் தகவலறிந்த பல்லடம் தீயணைப்புத் துறையினா் அங்கு விரைந்து சென்று சுமாா் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனா். இந்த தீ விபத்தில் நூற்பாலையில் இருந்த பஞ்சு மூட்டைகள், நூல்கண்டுகள், இயந்திரங்கள் என பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமாயின. இது குறித்து காமநாயக்கன்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

