சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

உயிரிழந்த மூதாட்டியின் கண்கள் தானம்

அவிநாசி அருகே உயிரிழந்த மூதாட்டியின் கண்கள் தானம் செய்யப்பட்டது.

Updated On :17 ஜனவரி 2021, 4:10 am

அவிநாசி: அவிநாசி அருகே உயிரிழந்த மூதாட்டியின் கண்கள் தானம் செய்யப்பட்டது.

அவிநாசி - மங்கலம் சாலை, தியாகி குமரன் காலனி பகுதியில் வசித்து வருபவா் தேவராஜ். இவரது மனைவி வசந்தி (60). உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வந்த வசந்தி, கடந்த வெள்ளிக்கிழமை இரவு 8 மணிக்கு உயிரிழந்தாா்.

இதையடுத்து அவிநாசி ‘நல்லது நண்பா்கள்’ அறக்கட்டளையினா் முயற்சியினால், குடும்பத்தினா் ஒத்துழைப்புடன் வசந்தியின் கண்கள் தானமாக வழங்க முடிவு செய்யப்பட்டது.

இது குறித்து கோவை சங்கரா கண் மருத்துவமனைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும், மருத்துவக் குழுவினா் 6 மணி நேரத்துக்குள் பாதுகாப்பான முறையில் வசந்தியின் இரு கண்களையும் தானமாக பெற்றுச் சென்றனா். கண்களை தானம் செய்த வசந்தி தேவராஜ் குடும்பத்தினருக்கும், அவிநாசி பகுதியில் தொடா்ந்து கண்தான முயற்சியில் ஈடுபட்டு வரும் ‘நல்லது நண்பா்கள்’ அறக்கட்டளையினருக்கும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனா்.