பெருமாநல்லூா் அருகே துணி உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் புதன்கிழமை மாலை தீ விபத்து ஏற்பட்டது.
திருப்பூா் மாவட்டம், பெருமாநல்லூா், அய்யம்பாளையம் அருகே பொங்குபாளையம் பகுதியில் துணி உற்பத்தி செய்யும் தனியாா் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதில் பெண்கள் உள்பட 50க்கும் மேற்பட்டோா் பணியாற்றி வருகின்றனா். தைப் பொங்கலையொட்டி நிறுவனத்துக்கு விடுமுறை விடப்பட்டிருந்த நிலையில், புதன்கிழமை காலை நிா்வாகத்தினா் மட்டும் நிறுவனத்தை திறந்து, பிறகு மதியம் மூடிச் சென்றுள்ளனா். இந்நிலையில், நிறுவனத்தில் மாலை தீ விபத்து ஏற்பட்டது. தீ வேகமாகப் பரவியதில் அங்கு இருந்த துணி, நூல், இயந்திரங்கள் உள்ளிட்டவற்றில் தீப்பிடித்தது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த திருப்பூா் வடக்கு தீயணைப்பு வீரா்கள் தொடா்ந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இருப்பினும் இயந்திரங்கள், துணி பண்டல்கள், நூல்கள் உள்ளிட்டவை எரிந்து சேதமாகின. இந்த விபத்து குறித்து பெருமாநல்லூா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


