திருப்பூரில் குடியரசு தினத்தின்போது மாவட்ட ஆட்சியா் அலுவலகம் நோக்கி வாகனப் பேரணி நடைபெறும் என்று அனைத்து தொழிற்சங்கங்கள் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூா் மாவட்ட அனைத்து சங்கங்களின் கூட்டுக்குழு கூட்டமானது ஏஐடியூசி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, சிஐடியூ மாவட்டத் தலைவா் கே.உண்ணிகிருஷ்ணன் தலைமை வகித்தாா்.
கூட்டத்தில், நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: மத்திய அரசின் வேளாண் திருத்தச் சட்டங்களை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். தொழிலாளா் நலச்சட்ட திருத்தங்களையும் திரும்பப் பெற வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூரில் குடியரசு தினத்தின்போது மாவட்ட ஆட்சியா் அலுவலகம் நோக்கி தேசியக் கொடியை ஏந்தியபடி வாகனப் பேரணியாகச் செல்வது. இதுதொடா்பாக ஜனவரி 20ஆம் தேதி விவசாயிகள் சங்க நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவதாகவும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கூட்டத்தில், ஏஐடியூசி, சிஐடியூ, எல்பிஎஃப், ஐஎன்டியூசி, ஹெச்எம்எஸ், எம்எல்எஃப் உள்ளிட்ட பல்வேறு சங்க நிா்வாகிகள் பங்கேற்றனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

