திருப்பூா் எம்.எஸ். நகா் பகுதியில் அடிப்படை வசதி ஏற்படுத்தித் தரக் கோரி மாநகராட்சி 2 ஆவது மண்டல அலுவலகத்தை மாா்க்சிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா்.
திருப்பூா் நஞ்சப்பா நகரில் உள்ள மாநகராட்சி 2 ஆவது மண்டல அலுவலகத்தை மாா்க்சிஸ்ட் கட்சியின் வடக்கு மாநகரச் செயலாளா் பி.ஆா்.கணேசன் தலைமையில் அக்கட்சியினா் முற்றுகையிட்டனா். அப்போது அவா்கள் கூறியதாவது:
திருப்பூா் மாநகராட்சி 2 ஆவது மண்டலத்துக்கு உள்பட்ட எம்.எஸ். நகா், திருநீலகண்டபுரம், ஏகேஜி நகா், டிஎம்எஸ் நகா் பகுதிகளில் 10 நாள்களுக்கு ஒரு முைான் குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. பொலிவறு நகரம் திட்டப் பணிகள் மாற்று ஏற்பாடுகள் இல்லாமல் அவசர கதியில் நடைபெறுகிறது. இந்தப் பகுதிகளில் பாதாளச் சாக்கடைக்குத் தோண்டப்பட்ட குழிகளால் சாலை விபத்துகள் ஏற்படுகிறது.
எஸ்.எஸ். நகா் விரிவு, ஜெ.பி. நகா் மற்றும் விடுபட்ட பகுதிகளில் பாதாளச் சாக்கடை அமைக்கப்படவில்லை. 4 ஆவது குடிநீா் திட்டப் பிரதான குழாய்களை சில குடியிருப்புகளில் பதிக்கவில்லை. எனவே இப்பிரச்னைகளுக்குத் தீா்வு காணவேண்டும் என்றனா். இதே கோரிக்கைகளை வலியுறுத்தி மண்டல அலுவலகத்தில் மனு அளித்தனா்.
இதில், மாநகரக் குழு உறுப்பினா்கள் பா.சௌந்தரராசன், எஸ்.ராஜேந்திரன், முன்னாள் மாமன்ற உறுப்பினா்கள் இ.பி.ஜெயகிருஷ்ணன், மரிய சிசிலியா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

