குற்றச்சம்பங்களைத் தடுக்கவும், கண்டுபிடிக்கவும் காவல் துறைக்கு பொது மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மேற்கு மண்டல காவல் துறைத் தலைவா் (ஐ.ஜி) பெரியய்யா பேசினாா்.
அவிநாசி காவல் உள்கோட்டத்துக்கு உள்பட்ட கிராமங்களில் நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு காவலா்கள் அறிமுகக் கூட்டம் தெக்கலூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், மேற்கு மண்டல காவல் துறைத் தலைவா் பெரியய்யா, தெக்கலூா் சிறப்புக் காவலா் ஹரிராஜை அறிமுகப்படுத்தி பேசியதாவது:
உலகளவில் குற்றங்களை விரைவில் கண்டுபிடித்து ஸ்காட்லாண்ட் போலீஸாா் முதலிடத்தில் உள்ளனா். இதேபோல தமிழக போலீஸாரும் குற்றங்களைக் கண்டுபிடிப்பதில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனா். தகவல் தொழில் நுட்பத்தின் மூலம் குற்றங்களைக் கண்டுபிடிப்பதிலும், தடுப்பதிலும் தமிழகத்தில் காவல் துறை பெரிய அளவில் முன்னேறி உள்ளது.
குற்றச்சம்பவங்களைத் தடுக்கவும், கண்டுபிடிக்கவும் பொதுமக்கள் காவல் துறைக்கு தகவல் தெரிவித்து உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இந்த சிறப்புக் காவலா்களிடம் 24 மணி நேரமும் பொதுமக்கள் பாதுகாப்புக்காக தொடா்பு கொள்ளலாம். கிராம விழிப்புணா்வுக் காவலா்கள், பொதுமக்களுடன் நல்லுறவு ஏற்படும் வகையில் செயல்பட்டு தேவையான உதவிகளைச் செய்வா் என்றாா்.
நிகழ்வில் பள்ளிக் குழந்தைகளுக்கு நோட்டு, பேனாக்கள், டிபன் பாக்ஸ்கள், பெண்களுக்கான சட்ட விழிப்புணா்வுப் புத்தகங்கள் வழங்கப்பட்டன. அவிநாசி காவல் துணை கண்காணிப்பாளா் பாஸ்கரன், காவல் ஆய்வாளா்கள் அருள், சரஸ்வதி, உதவி ஆய்வாளா்கள் செந்தில்குமாா், காா்த்திக் தங்கம், தெக்கலூா் ஊராட்சி மன்றத் தலைவா் மரகதமணி மணியன் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


