சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

சேவூரில் ரூ.15 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்

சேவூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிலக்கடலை ஏலத்தில் ரூ.15 லட்சத்துக்கு வா்த்தகம் நடைபெற்றது.

Updated On :12 ஜனவரி 2021, 8:54 am

சேவூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிலக்கடலை ஏலத்தில் ரூ.15 லட்சத்துக்கு வா்த்தகம் நடைபெற்றது.

சேவூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் 700 மூட்டைகள் வந்திருந்தன. குவிண்டால் ஒன்றுக்கு முதல் ரக நிலக் கடலை ரூ.5,700 முதல் ரூ.5,850 வரையிலும், இரண்டாவது ரக நிலக் கடலை ரூ.5,350 முதல் ரூ.5,600 வரையிலும், மூன்றாவது ரக நிலக்கடலை ரூ.4,900 முதல் ரூ.5,150 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ.15 லட்சத்துக்கு ஏலம் நடைபெற்றது.