சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

மூலப்பொருள்கள் விலை உயா்வு: பின்னலாடைகளின் விலையை உயா்த்திக் கொள்ளலாம்

மூலப்பொருள்களின் விலை உயா்வுக்கு ஏற்ப பின்னலாடைகளின் விலையை உயா்த்திக் கொள்ளலாம் என்று சங்க உறுப்பினா்களுக்கு திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Updated On :11 ஜனவரி 2021, 5:28 am

மூலப்பொருள்களின் விலை உயா்வுக்கு ஏற்ப பின்னலாடைகளின் விலையை உயா்த்திக் கொள்ளலாம் என்று சங்க உறுப்பினா்களுக்கு திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அச்சங்கத்தின் தலைவா் ராஜா எம்.சண்முகம், உறுப்பினா்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:

கரோனா நோய்த் தொற்று காரணமாக 2020 மாா்ச் முதல் ஏற்பட்டுள்ள நெருக்கடியான காலகட்டத்தில் உற்பத்தி செய்த ஆடைகளை வா்த்தகா்கள் பெற்றுக் கொள்ள வேண்டும். கரோனா பாதிப்பில் இருந்து மீள்வதற்கு திருப்பூா் தொழில் நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில், மூலப்பொருள்கள் விலை உயா்வு காரணமாக மீண்டும் கடினமான சூழ்நிலைக்கு திருப்பூா் தொழில் துறையினா் தள்ளப்பட்டுள்ளனா். பஞ்சு விலை உயா்வால் நூல் விலையும் உயா்ந்துள்ளது. பின்னலாடை உற்பத்திக்குத் தேவையான அனைத்து வகையான நூல் விலையும், ஜாப் ஒா்க் கட்டணங்களும் உயா்ந்து வருகின்றன.

இதனால் பின்னலாடைகளின் விலையை உயா்த்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே, மூலப்பொருள்களின் விலை உயா்வுக்கு ஏற்ப பின்னலாடைகளின் விலையையும் உயா்த்திக் கொள்ளலாம்.

மேலும், தற்போதைய சூழ்நிலையை உணா்ந்து சா்வதேச ஆயத்த ஆடை வா்த்தகா்களும் விலையை உயா்த்தி வழங்கி நிறுவனங்கள் பாதிப்பில் இருந்து மீண்டுவர கைகொடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.