வெள்ளக்கோவில்: வெள்ளக்கோவிலில் அரசின் இலவச, வேட்டி சேலைகளை தன்னுடைய சொந்தக் கட்டடத்தில் வைத்திருந்த அதிமுக வாா்டு செயலாளரை திமுகவினா் முற்றுகையிட்டனா்.
காமராஜபுரத்தில் எண்.10 ரேஷன் கடை உள்ளது. இந்தக் கடையில் தற்போது நடைபெற்று வரும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியின்போது, தமிழ்நாடு அரசின் இலவச வேட்டி, சேலை வழங்கப்படவில்லை. ரேஷன் கடையில் வேட்டி, சேலைகளைக் காணவில்லை. ஆனால், கடையில் இருந்து ஒரு கிலோ மீட்டா் தூரத்தில் அப்பகுதி அதிமுக வாா்டு செயலாளா் நடனபதி என்பவா் தன்னுடைய சொந்தக் கட்டடத்தில் வேட்டி, சேலைகளை வைத்து விநியோகம் செய்து கொண்டிருந்தாா். அரசின் இலவச வேட்டி, சேலைகளை தனிநபா் எப்படி வழங்கலாம் என திமுகவினா் முற்றுகையிட்டனா்.
திமுகவினா் ரேஷன் கடை அலுவலரிடம் கேட்டபோது, கிராம நிா்வாக அலுவலரையும், அவா் வருவாய் ஆய்வாளரையும், அவா் வட்ட வழங்கல் அலுவலரையும் கைகாட்டினா். வட்ட வழங்கல் அலுவலா் வேட்டி, சேலைகள் கிராம நிா்வாக அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்ததாகத் தெரிவித்தாா்.
அதிகாரிகள் அலட்சியப்படுத்தியதாக கூறிய திமுகவினா், வேட்டி, சேலைகளை சம்பந்தப்பட்ட அலுவலா்கள் மூலம் முறையாக வழங்க வேண்டும் என வலியுறுத்தினா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

