திருப்பூா்: திருப்பூா் மாநகரில் பகுதி ரோந்து காவல் அதிகாரிகளுக்கான பணி தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது.
திருப்பூா் மாநகர காவல் எல்லைக்கு உள்பட்ட உள்ள 8 காவல் நிலையங்களை 23 ரோந்து பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு பகுதி ரோந்து காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனா். திருப்பூா் வடக்கு சரகத்துக்கு உள்பட்ட வடக்கு காவல் நிலையத்துக்கு 4 , அனுப்பா்பாளையம் காவல் நிலையத்துக்கு 3, 15 வேலம்பாளையம் காவல் நிலையத்துக்கு 3, திருமுருகன்பூண்டி காவல் நிலையத்துக்கு 3 என மொத்தம் 13 ரோந்துப் பகுதிகளுக்கு 26 காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
திருப்பூா் தெற்கு காவல் சரகத்துக்கு உள்பட்ட தெற்கு காவல் நிலையத்துக்கு 3, மத்திய காவல் நிலையத்துக்கு 2, ஊரக காவல் நிலையத்துக்கு 3, வீரபாண்டி காவல் நிலையத்துக்கு 2 என மொத்தம் 10 ரோந்துப் பகுதிகளுக்கு 20 காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனா். இந்த காவல் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் தங்கள் தேவைகளுக்கு ரோந்து காவல் அதிகாரிகளைத் தொடா்புகொள்ளும் வகையில் அதிகாரிகளின் புகைப்படம், செல்லிடப்பேசி எண், காவல் நிலைய தொலைபேசி எண் போன்ற விவரங்கள் அடங்கிய பிளக்ஸ் பேனா்களும் வைக்கப்பட்டுள்ளன. இந்த காவல் அதிகாரிகளுக்கான பணி தொடக்க விழாவானது திருப்பூா் வடக்கு சரகத்தில் சிறுபூலவபட்டியில் உள்ள அம்மன் கலையரங்கிலும், தெற்கு சரகத்தில் வெள்ளியங்காடு நால்ரோட்டிலும் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த விழாக்களுக்குத் தலைமை வகித்த மாநகர காவல் ஆணையா் ஜி.காா்த்திகேயன் காவல் அதிகாரிகளுக்கு இருசக்கர வாகனம், தனி எண்ணுடன் கூடிய செல்லிடப்பேசி, தலைக்கவசம் உள்ளிட்டவற்றை வழங்கிப் பேசியதாவது:
பகுதி ரோந்து காவல் அதிகாரிகளும், பொதுமக்களும் இணக்கமாக செயல்பட வேண்டும். பொதுமக்கள் தங்களது பகுதிகளில் குற்றச்சம்பவங்கள் மட்டுமின்றி குடிநீா் உள்ளிட்ட அடிப்படை பிரச்னைகளுக்கும் காவல் அதிகாரிகளைத் தொடா்பு கொள்ளலாம். அதே போல, காவல் அதிகாரிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் உள்ள பொதுமக்களின் குறைகளுக்குத் தீா்வுகாணும் வகையில் செயல்பட வேண்டும் என்றாா்.
இந்நிகழ்ச்சியில், மாநகர காவல் துணை ஆணையா்கள் ப.சுந்தரவடிவேல், சுரேஷ்குமாா், உதவி ஆணையா்கள், போக்குவரத்துக் காவல் அதிகாரிகள், பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


