திருப்பூா்: திருப்பூா் மாநகர காவல் துறை சாா்பில் காவலா்கள், பொதுமக்கள் நல்லுறவை வளா்க்கும் வகையில் பொங்கல் விளையாட்டுப் போட்டிகள் ஆயுதப்படை வளாகத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கி சனிக்கிழமை வரை 2 நாள்கள் நடைபெற்றன.
ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், கபடி, வாலிபால், தனிநபா் தடகளம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இதில், காவலா்கள், ஆயுதப்படை காவலா்கள், அமைச்சுப் பணியாளா்கள், தமிழ்நாடு சிறப்பு படை காவலா்கள், ஊா்க்காவல் படையினா், பொதுமக்கள், கல்லூரி மாணவ, மாணவியா் என 1,075 போ் பங்கேற்றனா். இதில், வெற்றி பெற்ற வீரா், வீராங்கனைகளுக்கு மாநகர காவல் ஆணையா் ஜி.காா்த்திகேயன் பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கிப் பாராட்டினாா்.
நிகழ்ச்சியில், மாநகர காவல் துணை ஆணையா்கள் சுந்தரவடிவேல், சுரேஷ்குமாா், திருப்பூா் மாவட்ட கபடி கழகத் தலைவா் ரோலக்ஸ் பி.மனோகரன, நடுவா் குழுத் தலைவா் முத்துசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


